மத்திய அமைச்சர்கள்
சிதம்பரம், வாசன், இளங்கோவன்
போன்றவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லையாம்.
தங்களுக்குள் கோஷ்டி பிரச்னை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்க பாலு கூறியிருக்கிறார்.
கோஷ்டி சண்டை இல்லாமால் காங்கிரஸ் கட்சியா....?
வரலாறு படிங்க சார் காமராஜர் காலத்திலேயே கோஷ்டி சண்டை இல்லாம இருந்தது கிடையாது
அப்புறம் பாருங்க சும்மா
காமராஜர் ஆட்சி அமைக்க போறோம்,
காமராஜர் ஆட்சி அமைக்க போறோம்
அப்படீன்னு கூவிகிட்டே இருக்காதீங்க காமராஜர் ஆட்சி காலத்தில பஞ்சம் தான் தலை விரிச்சு ஆடுச்சு என்பது தான் உண்மை
அவர் காலத்தில விமானத்தில இருந்து தமிழ்நாடு பூராம் கருவேல மரம் என்கிற விஷ விதையை தூவி விட்டாங்க
இதை யாரும் மறுக்க முடியாது வேலையில்லா திண்டாட்டம் தலை விரிச்சு ஆடிச்சு அதனால ஆட்சி கை மாறி தி.மு.க. விற்கு போனது.
அந்த ஆட்சியத்தான் திரும்ப கொண்டு வர போறீங்களா
பாவம் மக்கள் அவுங்கள வுட்ருங்க
இனி மேல பஞ்சம் வந்தா தாங்காது.
போங்க சார் சும்மா சும்மா
காமெடி
பண்ணாம வேற எதாவது புதுசா டிரை பண்ணுங்க
0 comments:
Post a Comment