வேற ஆள் இல்ல போங்க

தமிழகம் முழுவதும் வன்னியர்கள்
பா.ம.க.விற்கு வாக்களித்தால்
100 தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறலாம்னு
அய்யா ராமதாஸ் சொல்லியிருக்காரு.
ஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவையாம்.
அப்போது யாராவது தானாகவே முன்வந்து
ஆதரவு கொடுப்பாங்களாம்.
தாழ்த்தப்பட்டவர்களும்,
வன்னியர்களும் ஒன்று சேர்ந்து
தேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில்
படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்னு
அவரோட கணிப்பு.
வடிவேலு,
கஞ்சா கருப்புக்கு
இணையா காமெடி பண்றதுக்கு
உங்களவிட்டா  
வேற ஆள் இல்ல போங்க....

ஆஸ்கார் கிடைக்கும்னு நினைக்கிறேன்

கொஞ்சம் பொறுமையோடு தான் பார்க்கனும் கொஞ்ச பேர் இந்த வீடியோ பார்திருப்பீங்க இருந்தாலும் பார்காதவுங்க பார்க்கலாம்
கண்டிப்பா அவுருக்கு ஆஸ்கார் கிடைக்கும்னு நினைக்கிறேன். அவுருக்கு கிடைக்கிதோ இல்லையோ எனக்கு ஒரு ஓட்டு போடுங்க
ஹீ... ஹீ... ஹீ...

எவனா இருந்த எனக்கென்ன

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்துக்களை தடுக்கவும், 
ரோந்து பணிக்காகவும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டார்கள். 
அவர்களுக்கு நவீன வசதிகளுடன் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் 
பல்வேறு இடங்களில் வாகனங்களை மறித்து வசூல் வேட்டை நடத்துவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

குறிப்பாக மேலூர் பகுதியில் அதிக அளவில் வசூல் வேட்டை நடப்பதாக தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்திக்கு தகவல்கள் வந்தன.

இதையடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி இறங்கிட்டாரு. 
காலைல 6 மணிக்கு ஐ.ஜி. கிருஷ்ண மூர்த்தி சாதாரண உடையில் வாடகை காரில் மேலூர் நோக்கி போயிருக்காரு.

அப்போது நான்கு வழிச்சாலையில் கூத்தப்பன்பட்டி பாலம் அருகே சென்றபோது அங்கு பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து படை சப்-இன்ஸ்பெக்டர்  வரிசையாக வாகனங்களை நிறுத்தி வசூல் வேட்டை நடத்தியிருக்கார். 
இதில ஐ.ஜி. காரும் தப்பல. 
இதனை அறிந்த ஐ.ஜி. கிருஷ்ண மூர்த்தி காரை விட்டு இறங்காமல் டிரைவரை மட்டும் அனுப்பி லைசென்சு மற்றும் ஆவணங்களை ரோந்து போலீசாரிடம் காண்பிக்கு மாறு அனுப்பி வைத்தார். 
ஆனாலும் அவகள்
 எவனா இருந்த எனக்கென்ன 
என்று பணம் வசூல் பன்னிட்டாங்க. 
வங்கனும்னு முடிவு பன்னிட்டா 
ஐ.ஜி இருந்தா என்ன....? 
கமிஷ்னரா இருந்தா என்ன...?
     


சின்ன புள்ள தனமா இருக்கு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில பெருமளவு முறைகேடுகள் நடந்ததா,
மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ., விசாரிக்கிது . ,
இந்த விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்,
நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்துருக்கு.
அப்போ, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ரவால்,
 ""இந்த ஊழல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் ஏராளமான அளவில் இருப்பதாலும்,
சிக்கலானதாக இருப்பதாலும்,
சி.பி.ஐ., விசாரணையை முடிக்க மேலும் சிறிது அவகாசம் தேவைப்படும்ன்னு சொல்லியிருக்கார்.
இந்த நேரத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள்,
"நீங்கள் (சி.பி.ஐ.,) வேண்டுமென்றே விசாரணையை மெதுவாக நடத்துகிறீர்கள்.
சி.பி.ஐ., இதுவரை எதையும் செய்யவில்லை.
இது தான் அரசு செயல்படும் முறையா?
மற்ற வழக்குகளிலும் இதை போன்ற நடைமுறையைத் தான் பின்பற்றுகிறீர்களா?
ஏற்கனவே ஓராண்டு முடிந்துவிட்டது' ன்னு சொல்லியிருக்காங்க
இதுக்கு பதிலளிச்ச ரவால்,
""பிரச்னை சிக்கலானதாக இருப்பதால்,
விசாரணையை முடிக்க கால அவகாசமாகும்.
சி.பி.ஐ.,யின் மூத்த அதிகாரிகள் தான் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்
அப்படின்னு சொல்லிருக்கார்.
அதற்கு நீதிபதிகள்,
"10 ஆண்டுகளில் விசாரணையை முடித்து விடுவீர்களா?'
என, கேள்வி எழுப்பியிருக்காங்க.
என்னையா இது  
சின்ன புள்ள தனமா இருக்கு
நம்ம நாட்ல எந்த ஊழல் வழக்கு உடனே முடிஞ்சுருக்கு குறைஞ்சது 20-30 வருஷம் ஆகும்ல
இந்தவிவரம் கூட தெரியாம எப்படி தான் இவுங்க எல்லாம் நீதிபதி ஆனாங்களோ......?

இதுவும் நம்மது தான்

  • ஏறு தழுவல் - இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட ...
    8 years ago
  • மாமனார் குளோஸ் - திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக...
    11 years ago

Pages

இந்த பக்கம் வந்தவுங்க

Powered by Blogger.

நிலா

நிலா
நிலா

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Popular Posts

Followers

About Me

My Photo
ஆயிரத்தில் ஒருவன்
View my complete profile

Blog Archive