undefined
undefined

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளதாம்
இவ்வளவு பணம் செலவழித்தும்,
அரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறதாம்.
எனவே, இதுபோன்ற போட்டிகளுக்காக செலவழிப்பதற்கு பதில்,
வறுமையில் வாடும் மக்களின் மேம்பாட்டுக்காக
அந்த பணத்தை செலவழிக்கலாம்
என்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்த மைதானங்கள் காலியாக இருந்ததாகவும்
காலியாக இருந்த மைதானங்களில்,
காமன்வெல்த் போட்டிகளுக்காக பணியாற்றிய தொழிலாளர்களின் குழந்தைகளை அமர வைத்திருக்கலாம் என்றும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டில் இருந்த குறைகளால்,
நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாம்.
கடந்த 63 ஆண்டுகளில்,
இதுபோல் வேறு எந்த நிகழ்ச்சியிலும் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது இல்லையாம்.
போட்டிகளுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும்
அதனால் பயன் கிடைக்கவில்லை.
மாறாக கெட்ட பெயர் தான் ஏற்பட்டுள்ளதாம்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடாக இருப்பதை விட,
விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நாடாக இருப்பது தான் நல்லது என்றும்.
மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
அட போங்க மணி சார்
காமன் வெல்த் போட்டி நடந்ததுனால தான்
கல்மாடி போன்ற ஆளுக பல ஆயிரம் கோடி ஊழல் செஞ்சு சம்பாரிக்க முடிஞ்சது.
நீங்க பதவியில இல்லாததால இப்படி எல்லாம்
காம்ரேட்டுகள் மாதிரி பேசுறீங்க
நீங்க நல்லவரா...? கெட்டவரா....?
0 comments:
Post a Comment